Header Ads



அன்ஜான் உம்மா, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை என்பவற்றின் உறுப்பினர்கள் 31 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும், மாகாண சபை உறுப்பினர்கள் 7 பேரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் இவர்களில் அடங்குவதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

திமுது அபேகோன், ஆர்.பீ.ஏ. ரணவீர, எஸ்.கே. சுபசிங்க மற்றும் அன்ஜான் உம்மா ஆகியோரே இணைந்து கொண்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.  

1 comment:

  1. தேர்தலோ, யுத்தமோ இவற்றில் எது வந்தாலும், முதலில் இறப்பது உண்மையே!

    ReplyDelete

Powered by Blogger.