மைத்திரி பக்கம் தாவிய ஸ்ரீயானி
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
இன்று (10) மாலை ஜனாதிபதியை சந்தி அவர், ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், திருமதி ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளதுடன், திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஸ்ரீயானி விஜேவிக்ரம ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் கட்சியான, மக்கள் ஐக்கிய முன்னணி (மஹஜன எக்சத் பெரமுண) கட்சியின் உறுப்பினராவார்.
Post a Comment