தேசிய மீலாத் விழா, முன்ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பானத்தில்
-இமாம் றிஜா-
எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள தேசிய மீலாத் விழாவுக்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்கான விஷேட கூட்டமொன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் ந.செல்வநாயகன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மஸ்தான் காதர் அவர்களுடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மாவைசேனாதிராஜா மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு மீலாத் விழாவை சிறப்பாக நடாத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர்,வடமாகாண பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment