Header Ads



தேர்தல் முடியும் வரை, வெளிநாடு செல்ல வேண்டாம் - ரணில் உத்தரவு

நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளும் காலத்தை தவிர, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை ஐக்கிய தேசியக்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பிரதேசங்களில் உள்ள பிரதேச சபைகளில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசியமான காரணங்களை தவிர தேர்தல் முடியும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் வளங்களை கிராமங்களுக்கு கொண்டு சென்று கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேலைத்திட்டம் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கி, கிராமங்களில் ஆட்சி அதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 50 பிரசாரக் கூட்டங்களை நடத்த அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.