கெஸ்பேவயில் யானைக்குள் குழப்பம்
கெஸ்பேவ தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் ஒரு குழு சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அக்கட்சியின் இளைஞர் பிரிவு இவ்வாறு விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது.
தொகுதி அமைப்பாளர் தொடர்பில் ஏற்பட்ட உடன்பாடின்மை இவர்கள் கட்சியிலிருந்து வெளிநடப்புச் செய்வதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர், உப தலைவர், பொருளாளர் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment