எந்த நேரத்திலும் அவர்கள், வரலாம் என மஹிந்த தெரிவிப்பு
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
எந்த நேரத்திலும் அவர்கள் வரலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது தரப்பிலிருந்து அரசாங்கத்துடன் சிலர் இணைய உள்ளதாக குறிப்பிடப்படுகின்றபோதும், அதுகுறித்து நிச்சயமாக குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment