Header Ads



நீரில் பயணிக்கும் துவிச்சக்கரவண்டி - இலங்கை இளைஞனின் விசித்திர கண்டுபிடிப்பு


நீரில் பயணிக்கக்கூடிய துவிச்சக்கரவண்டியொன்றை யாழ். தென்மராட்சி இளைஞரொருவர் கண்டு பிடித்துள்ளார்.

மறவன்புலவு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞரே, குறைந்தளவிலான வளங்களைப் பயன்படுத்தி மிதக்கும் சைக்கிளினை உருவாக்கியுள்ளார்.

சக்கரங்களுக்கு பதிலாக பிளாஸ்ரிக்கினாலான கொள்கலன்களை இணைத்து குறித்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருவார கால உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த மிதக்கும் சைக்கிள் நாவற்குழி பாலத்திற்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பின் மேல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் பலரும் குறித்த கண்டுபிடிப்பினை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளதுடன், பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

5 comments:

Powered by Blogger.