சிறுமிகளின் கத்னாவை தடைசெய்ய கோரிக்கை, சர்வதேச ஊடகமும் செய்தி வெளியீடு
சிறுமிகளின் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் “கத்னா” சடங்கை தடை செய்யுமாறு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட இலங்கைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் சில முஸ்லிம் குழுக்களால் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் கத்னா சடங்குக்கு எதிராக இக்குழுவினர் குரல்கொடுத்ததையடுத்து,தன்னை சந்திப்பதற்கு இக்குழுவின் நிதியமைச்சர் தலதா அத்துகோரள அழைப்பு விடுத்திருந்தார் என ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்னாவினால் பாதிக்கப்பட்ட பெண்கள், இச்சடங்கை தடைசெய்யுமாறு கோருகின்றனர் என இக்குழுவின் சட்டத்தரணி இர்மிஸா தேகல் தெரிவித்துள்ளார்.
கத்னா சடங்களை பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு நடவடிக்கையாக (FGN) உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. எனினும், கத்னாவை ஆதரிப்போர், இது பிறப்புறுப்பு சிதைப்பு நடவடிக்கை அல்ல எனக் கூறுகின்றனர்.
கத்னாவில் தமக்கு ஏற்பட்ட எத்தகைய நீண்டகால உடல், உள பாதிப்புகள் ஏற்பட்டன என்பதை இலங்கை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் பெண்கள் பலர் தெரிவித்துள்ளனர் எனவும் ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இச்சடங்கினால் ஒரேயொரு சிறுமி பாதிக்கப்பட்டாலும் அது, மேற்படி சடங்கை தடை செய்வதற்குப் போதுமானது என ரோய்ட்டர்ஸிடம் தம்மை இனங்காட்ட விரும்பாத பெண் ணொருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான மெரினி டி லிவேரா, அமைச்சருக்கும் மேற்படி செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பை வரவேற்றுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதங்கள் நடைபெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
This is our failure. No point of blaming those who are affected.
ReplyDeleteISLAAM ALSO TELLING DONT DO THIS SO SUPPORT THIS
ReplyDeleteகுழந்தைகள் என்ன பாவம் செய்தனர் விட்டு விடுங்கள்
ReplyDelete