Header Ads



சேதமடைந்த நாணயத்தாள்களை, வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்

சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கிழிந்த அல்லது சேதமடைந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாணயத்தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், 1949ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.