ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாட்டில், மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகச் சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்ட, பிராந்திய கிளைகளின் ஒத்துழைப்புடன் கடந்த 2017-12-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாத்தளை, உக்குவலை பிரதேசத்தில் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.
நேரம் : 08.30 காலை முதல் மாலை 10.30 வரை
இடம் : முனீபா பெண்கள் மத்ரஸா, இல: 1யு, மாருகோன, உக்குவலை
(மாருகோன மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னதாக)
இந்நிகழ்வு தேர்ச்சி பெற்ற கண் பரிசோதகர்களால் நடாத்தப்பட்டதுடன். சகல இன மக்களும் கலந்து கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக்கொண்டார்கள். அதன் மூலம் சுமார் 500 கும் மேற்பட்ட நபர்கள் பயன் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் - சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
பாராட்டுக்கள்
ReplyDelete