Header Ads



காலியில் முஸ்லிம் வர்த்தகரின் கடையில் தீ, ஆறுதலாக வந்த தீயணைப்பு படை

காலியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று -06- காலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டிடத்தின் முதல் மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும் இரண்டாவது மாடிக்கு தீ பரவிய பின்னரே படையினர் வருகை தந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீப்பரல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.