Header Ads



ஐ.தே.கட்சிக்கு எதிராக, நீதிமன்றம் செல்லும் டிலான்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஹாலி-எல பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் இணைக்கப்பட்டிருந்த சத்திய கடிதங்கள் சட்டவிரோதமானது என்பதால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி-எலயில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 43 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் இணைக்கப்பட்டிருந்த சத்தியக் கடிதங்களில் முத்திரை ஒட்டப்படவில்லை எனவும் பதுளை மாவட்ட செயலகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வேட்பு மனுக்களின் செல்லுப்படி தன்மை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.