Header Ads



ஜீவனும், அனுஷாவும் களமிறங்கமாட்டார்கள்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமான் களமிறங்கமாட்டார் எனத் தெரியவருகின்றது.

இலண்டனில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு திரும்பிய கையோடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்குள் உள்வாங்கப்பட்ட ஜீவன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊடாக தனது கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், பிரதான தேர்தலொன்றின் ஊடாகவே அவரது அரசியல் பயணம் இடம்பெறவேண்டுமென இ.தொ.கா. பிரமுகர்கள் விரும்புவதால், குட்டித் தேர்தலில் அவர் களமிறங்கமாட்டார் என இ.தொ.கா. பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியான அனுஷா சந்திரசேகரன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரும் களமிறங்கமாட்டார் எனத் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.