Header Ads



நான் என்ன குழந்தையா..?


அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த தாம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு தாழ்ந்துவிடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிலரது அழுத்தங்களே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றிணைந்த எதிரணியின் பேச்சு முறிவடையக் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதாவது, 1967ஆம் ஆண்டிலிருந்து அரசியல் செய்துவரும் தாம், நாமல் ராஜபக்ஷ போன்றவர்களது ஆலோசனைகளை பெறவேண்டிய தேவை இல்லை. அவரிடம் ஆலோசனை பெறுவதற்கு நான் என்ன குழந்தையா? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.