Header Ads



மஹிந்த விதித்துள்ள தடை

எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகம்புர துறைமுகம் விற்பனைச் செய்யப்பட்ட பணம் திறைச்சேரிக்குச் செல்லவில்லை.

அது இலங்கை வங்கியில் வேறு முறையில் வைப்பிலிடப்பட்டதாக தாம் அறிந்துகொண்டுள்ளதாக மகிந்த குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், வீதி அமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு அவப்பெயர் வாங்க விரும்பவில்லை.

அதன் காரணத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.