Header Ads



மூத்த ஊடகவியலாளர் அமீன், கலாபூஷணம் விருது பெற்றார்


அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்த விழாவில் 12 முஸ்லிம்களுக்கும், 18 தமிழர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

கலைஞா்களுக்கும், சிரேஷ்ட ஊடகவியாளா்களுக்கும் நாடகம், இலக்கியம் , இசை, நடனம், போன்ற கலைத்துறைகளுடன் தொடா்புடையவா்களுக்கும்  இந்த விருது வழங்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் இதன்போது கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில்  அமைச்சா்  எஸ்.பி. நாவின்ன, பிதியமைச்சா்  பாலித தேவப்பெரும, அமைச்சின் செயலாளா்  டி. சுவா்னபால, கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அனுசா கோகுல பெனாண்டோ,  கலைச்செல்வன், புரவலா் ஹாசீம் உமர் மற்றும் ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபா் அரசரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி வைத்தனா்.

– அஷ்ரப் ஏ சமத் –

No comments

Powered by Blogger.