போதை ஏற்படுத்தும் அகோரம் (உண்மைச் சம்பவம்)
தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்து ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாவுக்கு ஹெரோயின் புகைத்த நபர் ஒருவரை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்துக்கிடமாக நடமாடிய குறித்த இளைஞரின் நடத்தையில் சந்தேகமுற்ற பியகம பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் நாளாந்தம் 5000 ரூபாவை ஹெரோயினுக்காக செலவிடுவதாகவும், இதுவரை சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவை ஹெரோயின் பாவனைக்காக செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறந்த பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து, பிரபல ஆங்கில கல்வி நிலையம் ஒன்றில் ஆங்கில மொழியைப் போதிக்க தந்தை வழிசெய்து கொடுத்துள்ளதால் இந்த நபர் சிறந்த ஆங்கில அறிவைக் கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபரின் தந்தை தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி ஒய்வு பெற்றபோது கிடைத்த ஐம்பது லட்சரூபாவுக்கு அதிகமான தொகையும் இந்த நபரில் பொறுப்பிலிருப்பதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் பாடசாலை வாழ்க்கை முடிவடைந்ததுடன் தாய், தந்தையைப் பிரிந்து மனம் போன போக்கில் காலத்தை செலவிட்டுள்ளார். தந்தையின் சொத்துக்களை அவ்வப்போது விற்றதுடன், இறுதியாக எஞ்சியிருந்த ஆறு கடை அறைகளை சமீபத்தில் 30 இலட்ச ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் விற்பனை செய்த அறையொன்றில் 3000 ரூபா வாடகை செலுத்தி தங்கியிருப்பதாகவும் இந்த நபர் தெரிவித்துள்ளார்.
அறைகளை விற்பனை செய்து பெற்ற 30 இலட்சம் ரூபாவில் தற்போது 87 ஆயிரம் ரூபாவே எஞ்சியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபரை மஹர நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment