மஹிந்தவை பாதுகாப்பேன், என ரணில் உறுதி
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குத் தேவையாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர்கள் இருவரும், தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை என்றும் புலனாய்வுப் பிரிவினர், அவ்விருவருக்கும் மேலதிகப் பாதுகாப்பு தேவைப்படும் என்று அறிவித்தால், அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பேனென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று (08) நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
You are counting your days, how are you going to protect others.
ReplyDelete