உலகின் மிகப்பெரிய விமானம், இலங்கையில் எரிபொருள் நிரப்பியது
உலகில் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமானது இன்று -25- அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நியூசிலாந்தின் ஒக்லேன்ட்லிருந்து டுபாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது எரிபொருள் தீர்ந்துள்ளது.இதனையடுத்து உடனடியாக இந்த விமானம் இன்று (25) அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 400 பயணிகள், விமான அலுவலகர்கள் 30 பேர் பயணித்துள்ளனர்.
கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் ஜெட்- A-1 வர்க்க எரிபொருள் 30,000 லீற்றரை நிரப்பிக்கொண்டு மீ்ண்டும் அதிகாலை 4.30 மணியளவில் டுபாய் நோக்கி பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆர்.மகேஸ்வரி
Post a Comment