Header Ads



நீலக் கொடிகள் வானுயரப் பறக்க, மஸ்தான் வேட்பு மனுத்தாக்கல்.


மன்னார் நகர சபை உள்ளிட்ட மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  போட்டியிடும்  வேட்பாளர்களின் சார்பில் வன்னிப்பிராந்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான  கெளரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக மன்னாருக்கு வருகை தந்திருக்கிறார்.

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது துரித வளர்ச்சி காணும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களால் இன்று மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மன்னார் நகரைச் சூழ பவனியாக வருகை தந்து மன்னார் மாவட்டச் செயலாளரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  வேட்பாளர்கள், தொண்டர்கள்,  ஆதரவாளர்கள் என மன்னார் நகரம் தற்பொழுது நிறைந்து காணப்படுகின்றது.

கட்சிக்கொடிகள் பறக்கவிடப்பட்டு பதாகைகள் தொங்கவிடப்பட்டு மன்னார் விழாகோலம் பூண்டுள்ளது.

மன்னாரில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பொலிஸாருடன் இணைந்து விஷேட அதிரடிப்படையினரும் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இங்கு ஆதரவாளர்களுக்கு உரைநிகழ்த்திய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்,சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்தவர்களாக கெளரவமான அரசியலை செய்வதற்கு    அணைவருக்கும் அறைகூவல்  விடுக்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மன்னார் மாவட்டத்தை துரிதகதியில் அபிவிருத்தி அடையவைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஊடகப்பிரிவு

No comments

Powered by Blogger.