Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு, இடையூறு செய்யும் மாணவர்கள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதை கண்டித்து, பல்கலைக்கழக அதிகாரிகள் நிருவாக கட்டடத்தை விட்டு இன்று (29) வேளியேறி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் பொறியியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையையடுத்து பொறியியல் பீட மாணவர்கள் மூன்று பேருக்கு இரண்டு வருட  வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை மிக மோசமான முறையில் பகடிவதைக்கு உட்படுத்தியதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இரண்டு பேருக்கு 02 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும், வகுப்புத் தடைய நீக்குமாறு கோரியும் இரண்டு பீடங்களைச் சேர்ந்த  மாணவர்களும், கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 03 நாட்களாக தொடர்ச்சியாக நிருவாக கட்டடத்திற்கு முன்னால் மாணவர்கள் சத்தியக்கிர போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு கடமை புரியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்து, நிருவாகிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கெதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். ஹனீபா

3 comments:

  1. பகிடிவதை காட்டுமிராண்டித் தனமானது.  தெளிவான அநீதி.  இது எந்த உருவில் எங்கிருந்து வந்தாலும், சட்டம் கடுமையாக்கப்பட்டு, உலகிலிருந்தே  துடைத்து எறியப்பட்ட வேண்டியதே.

    அநாகரிகமாக நடப்போரின் நடத்தைகள், நாகரிகமான சமுதாயத்தின் இயல்பு வாழ்வை எவ்விதத்திலும் பாதிக்காதவாறு உறுதி செய்ய வேண்டியது ஒரு நல்ல நிருவாகத்தின் உன்னத பொறுப்பு.

    ReplyDelete
  2. These so-called moron students must be dismissed from the classes. Ragging is a lethal crime and all the culprits of students must be weed out from the university.

    ReplyDelete
  3. These so-called moron students must be dismissed from the classes. Ragging is a lethal crime and all the culprits of students must be weed out from the university.

    ReplyDelete

Powered by Blogger.