Header Ads



அப்பாவி சிறுமியின் உயிர், திட்டமிட்டு பறிக்கப்பட்டது



குளியாப்பிட்டிய கீழ் போஹிங்கமுவ பகுதி வீடொன்றில் நேற்றிரவு (21) உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது 8 மாதங்கள் வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்றின் சடலம் விவசாய கிணற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 


குழந்தையின் தந்தையால் சடலம் மீட்கப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 



அழகியவன்ன எம்.லகிஷா லக்துலி என்ற மூன்றரை வயது சிறுமியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே அது உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 



குழந்தையின் தாத்தாவே மதுபோதையில் இந்தக் கொடூரச் செயலை மேற்கொண்டிருக்கலாம் என குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 



குழந்தை உறங்கிய போது அணிந்திருந்த உடை, கிணற்றில் இருந்து மீட்கப்படும் போது உடை இல்லாமல் காணப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு தற்பொழுது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 



நேற்று முன்தினம் (20) இரவு சிறுமியின் தாயாரின் தாய் வௌிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தமை தொடர்பில் சந்தேகநபர் குடும்பத்தாருடன் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 



அன்றைய தினம் மதுபோதையில் இருந்த அவர் குடும்பத்தாருக்கு பாடம் புகட்டவுள்ளதாக தெரிவித்ததாகவும், பின்னர் தான் சிறுமியை நித்திரைகொள்ளச் செய்து விட்டு 7.30 அளவில் வீட்டை விட்டு வௌியேறியதாக ஆசிரியையான சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.



உயிரிழந்த சிறுமியின் தந்தையான அலகியவண்ண ரசிக்க பிரேமரத்ன கூறுகையில், தான் தாயின் வீட்டுக்கு சென்று தம்பியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற போது மனைவியும் அவரது தாயாரான கருணாவதி என்பவரும் சிறுமியைக் காணாது பாதைவழியே தேடி வந்ததாக தெரிவித்தார். 



அதன்பின்னர் தானும் சகோதரனும் குழந்தையைச் ​தேடிச் சென்ற போது சந்தேக நபரான மனைவியின் தந்தை வீட்டின் பின்புறத்தில் மதுபோதையில் தரையில் சரிந்திருந்ததாகவும், அவர் பிள்ளையை பற்றி எதையும் கூற மறுத்ததாகவும் அவர் குறிப்பி்ட்டார். 



தொடர்ந்து கைத்தொலைபேசி ஔியில் பிள்ளையை தேடிச் சென்ற போது விவசாய கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். 



எனவே, இந்த சம்பவத்துடன் மனைவியின் தந்தைக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.