புத்தரின் படத்தை அச்சிட்ட கருவாட்டுக்கடை, விகாரயை அச்சிட்ட இறைச்சிக்கடை காரர்களும் கைது
தம்புள்ளை பிரதேசத்தில் புத்த பெருமானின் படத்துடன் கூடிய நாட்காட்டியை அச்சிட்ட கருவாடு விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்தில் காணப்படும் கருவாட்டுக் கடை ஒன்றினால் அதன் வியாபாரப் பெயருடன் கூடிய 2018 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் அச்சிடப்பட்டிருந்தன.
அதில் பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் புத்த பெருமானின் உருவம் அச்சிடப்பட்டு, அப்படத்துக்குக் கீழாக கருவாட்டு துண்டினை ஒத்ததான உருவப்படமொன்று பொறிக்கப்பட்டுள்ளது.
பிக்கு ஒருவர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்கு குறித்த நாட்காட்டியுடன் சென்று இது தொடர்பில்முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து, குறித்த கருவாட்டு கடையை சோதனையிட்ட பொலிஸார் நேற்று முன்தினம் அதன் உரிமையாளரை, பௌத்த மதத்துக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் அங்கிருந்து 30 நாட்காட்டிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதேவேளை, அண்மையில் இரத்தினபுரி புளுகுபிடிய பிரதேசத்திலுள்ள இறைச்சி விற்பனை நிலையமொன்றின் கலண்டரில் ருவன்வெலிசாய விகாரையின் படம் பிரிசுரிக்கப்பட்டமை தொடர்பில் 50 கலண்டர்களுடன் மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(ரெ.கிறிஷ்ணகாந்)
இலங்கை போலிஸின் நியாயம் இது தான்.. புத்த பெருமானின் புகைப்படங்களை அவமானப்படுத்தினால் கைது செய்யப்படுவான். ஆனால் எங்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவனை, அல்லாஹ்வையும் புனித அல்குரானையும் அசிங்கப்படுத்தியவனை விடுதலை செய்வார்கள்.. உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி...நல்ல நியாயம்..
ReplyDeleteஉண்மை . இலங்கையில் சிங்களவர்களுக்கு எனறு ஒரு சட்டத்தையும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு என்று வேறு ஒரு சட்டத்தையும் அமுல் படுத்தும் நேர்மைமிகு பொலிசார்
ReplyDeleteநொல்லாட்சிச்சீசீசீ
ReplyDelete