Header Ads



திருடர்களின் குகையாக, உள்ளூராட்சி சபைகள்

மக்களை வெற்றி பெற செய்யும் எந்த சவாலுக்கும் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதை தடுக்க பெரிய சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றை தோற்கடித்து அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரே தடவையில் நடந்தும் உரிமையை பெற்றுக்கொள்ள முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகள் திருடர்களின் குகையாக இருந்து வருகின்றன. இதனால், அந்த நிறுவனங்களை தூய்மைப்படுத்தி மக்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவது அடுத்த சவால்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்பட்ட சகல தடைகளும் நீங்கியுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.