Header Ads



கொழும்பு பிரதி மேயர் பதவியை கேட்கிறார் றிசாத் - முஜீபுர் ரஹ்மான், சஜீவ சேனசிங்கவும் போட்டி

கொழும்பு, புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர மற்றும் நகர சபைகளின் உப பதவிகள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுதொடர்பில் சிறிகொத்தவில் வைத்து அமைச்சர் றிசாத் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக அறியக்கிடைத்தது.

எனினும் இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து சாதகமான பதிலை பெற்றுக்கொள்ள றிசாத் பதியுதீன் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அறியவருகிறது.

அதேவேளை கொழும்பில் ரோசி சேநாயக்கா மேயரானால் தனது ஆதரவாளர் ஒருவரை பிரதி மேயராக்க சுஜீவ சேனசிங்கவும், முஜீபுர் ரஹ்மான் தமக்கு சார்பான முஸ்லிம் ஒருவரை பிரதி மேயராக்க முயற்சிப்பதாகவும் மேலும் அறியவருகிறது.

2 comments:

  1. Y the hell rishard needs ...let them contest alone not with UNP...address illaza party ki deputy mayor...izellam over da thambi....rishard got only 27000 odd votes in general elections 2015 under UNP ticket...if he has contested alone only 5000 votes he would have got...UNP kick him out from ur alliance.

    ReplyDelete
  2. அதாஉல்லாஹ்க்கு பிறகு வந்த றிசாட் எங்கயோ போயிட்டாரு , அதாஉல்லாஹ் இன்னமும் தேசிய காங்கிரஸ் என்று சும்மா பீத்திக்கு அக்கரைப்பத்துக்குள்ள மட்டும் குதிரை ஓட்டுறார் .
    அவருக்கு இருக்கிற ஆக்கள், ஆதம் காக்கா , சயீது இப்படி பெரிய அரசியல் யானிகள்.

    ReplyDelete

Powered by Blogger.