Header Ads



எம்மிடம் அதிகாரத்தை தந்து, புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ளுக - அநுரகுமார


புதிய அரசியல் அனுபவம் ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தமக்கு வழங்குமாறு ஜேவிபி கோரியுள்ளது.

எஹேலியகொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இரண்டு பிரதான அணிகளில் உள்ளவர்களும் மாறி மாறி அணிமாறிக்கொள்கின்றனர். இவ்வாறு அணிமாறுகின்ற அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்களாவர்.

எனவே உள்ளூராட்சிமன்ற அதிகாரத்தை தம்மிடம் வழங்கி புதிய அரசியல் அனுபவத்தை பெறுமாறு அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஒரு சகாப்தத்திற்கு முன்பே திஸ்ஸமஹராம உள்ளூராட்சியில் நிரூபித்துக்காட்டிய ஊழலற்ற ஆட்சியை, முழு இலங்கையிலும் கொண்டு வருவதற்கான ஓர் அரிய வாய்ப்பு. 

    இதுவரை அரசியல்வாதிகளும் அவர்களது அருவருடிகளும் சட்ட விரோதமாக பங்கு பிரித்து அனுபவித்த இந்நாட்டின் வளங்களை, இலங்கையர் அனைவரும் சட்டபூர்வமாக  சம பங்காளிகளாக அனுபவிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு.

    இஸ்லாமிய நீதி நெறிகளுக்கு நெருக்கமான கொள்கைகள் மற்றும் அவற்றை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியவர்கள்.  தற்போதுள்ள சூழ்நிலையில் அதி சிறந்த தெரிவு.


    ReplyDelete

Powered by Blogger.