அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்
வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் உதய கம்மன்பிலவுக்கும் பந்துல குணவர்தனவுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
எப்படியோ அந்தப் பிரச்சினை சுமுகமான முறையில் தீர்த்துவைக்கப்பட்டதாம். என்றாலும் உதய கம்மன்பில வாக்குவாதம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி பந்துல குணவர்தனவின் காலில் விழுந்தாராம். என்னடா இது எனப் பார்த்தால் பின்னர்தான் விவரம் புரிந்ததாம்.
பந்துல குணவர்தன எம்.பி. அரசியலுக்கு வர முதல் வணிகவியல் ஆசிரியராக இருந்தவர். அப்போது உதய கம்மன்பில அவரிடம் மாணவராக இருந்தார்.
போயும் போயும் படிப்பித்த ஆசிரியரை அரசியலுக்காக திட்டித் தீர்த்துவிட்டோமே என்று கவலைப்பட்டே பந்துலவின் காலில் விழுந்தாராம் உதய கம்மன்பில எம்.பி.
Post a Comment