Header Ads



கட்டார் தமிழ்பேசும் உறவுகளின், ஈமானிய ஈரத்தை கசியவைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

நவீன சவால்களுக்குள் சாகா வரம் பெற்றதைப் போல் சகதி வாழ்க்கைக்குள் சங்கைமிகு எதிர்காலத்தை தொலைத்து கரைசேர முடியா ஓடமாய் ஓலமிடும் இளம் சந்ததிகளை சலபுஸ்ஸாலிஹீன்களின் வாழ்க்கை வசந்தத்திற்குள் வரவழைக்கும் இந்நிகழ்ச்சிகள் ளுடுனுஊ எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.
நமது அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்த வேண்டிய அல்லாஹ்வின் பண்புகளை மறந்து வாழும் இதயங்களுக்கு அல்லாஹ்வின் பண்புகளை அறிந்து வாழவேண்டிய அவசியம் பற்றி உணர்த்துவதற்கும்.

நன்மைகளை ஏவி தீமைகளை தடுப்பதில் நற்பண்புகளின் பங்களிப்பின் வகிபாகம் பற்றி அலசுவதற்கும்.

அழைப்பு பணியில் சஹாபிய பெண்மணிகளின் பங்களிப்பை நமது பெண்களோடு பகிர்ந்து புதிய பெண்களாக வீறு நடை போடுவதற்காகவும் இந்நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்க்குமிழிக்குள் வீடு கட்டி வாழத்துடிக்கும் இலட்சியமில்லாத நம் சமுகத்தை  நாளைய நித்திய உலகின் நிரந்தர சுகங்களுக்குள் இன்பம் காண்பதற்கு தடையாக தலைகாட்டும் சாத்தானிய வழிகளை மூடி நேரிய வழிகாட்டும்   இந் நிகழ்ச்சியை தவறவிடவேண்டாம்.

உள்ளங்களை ஊடறுத்து உண்மைகளை உரத்துக்கூவும் இவ் உரைகளின் தலைபு;புக்கள் இதோ!

நமது அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்த வேண்டிய அல்லாஹ்வின் பண்புகள்

நன்மைகளை ஏவி தீமைகளை தடுப்பதில் நற்பண்புகளின் பங்களிப்பு

அழைப்பு பணியில் ஸஹாபியப் பெண்களின் பங்களிப்பு

இத்தலைப்புகளில் பிரபல அறிஞர் அஷ;nஷய்க்  கலாநிதி எம்.எல் முபாறக் மதனி Phனு அவர்களின் சொற்பொழிவுகளால் உள்ளத்தை நிரப்பலாம் வாரீர்

2017 டிசம்பர் 28 ம் திகதிமுதல் டிசம்பர் 31 ம் திகதி வரை நிகழ்வுகள் நிஜமாகும்.

பெண்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு ளுடுனுஊ கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.

தகவல்: அபு உமைர் ஆல் சூரி 



No comments

Powered by Blogger.