Header Ads



செயிட் ஹூசைன் இலங்கை பற்றி அறிக்­கை, ஜெனி­வாவில் மார்ச்சில் விவாதம்

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும்  பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில்  மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி  இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. அதே­போன்று   பூகோள காலக்­கிர மீளாய்வு தொடர்­பான இலங்­கையின்  விவாதம்   மார்ச் மாதம் 16ஆம்­ தி­கதி  ஜெனிவா மனித   உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. 

 அந்த வகையில் இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி   இடம்­பெ­ற­வுள்ள நிலையில்  ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார்.  அதன்­பின்னர்  இலங்கை  தனது  தரப்பு நியாயம் சம்­பந்­த­மான அறிக்­கையை முன்­வைக்கும்.  

தொடர்ந்து  உறுப்பு நாடுகள் இலங்கை  நிலைமை தொடர்பில் இந்த விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்­ளன. அதா­வது 2015ஆம் ஆண்டு  ஐ.நா . மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருட  கால நீடிப்­புக்­குள்­ளான   இலங்கை குறித்து பிரே­ரணை எவ்­வாறு  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது தொடர்­பான  மீளாய்வு அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹசைனால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இதன்­போது அவர் இலங்கை மீது தனது விமர்­சனம் கலந்த அதி­ருப்­தியை வெளி­யி­டுவார் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு  மூன்று வரு­டங்கள் கடந்து விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல்   பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்­வைப்பார் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

மேலும்  இவ்­வாறே பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தாம­த­ம­டைந்தால் அடுத்த கட்­ட­மாக  எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்­பது குறித்து  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் விளக்­க­ம­ளிப்பார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது இவ்­வா­றி­ருக்க இலங்கை சார்பில்   இந்த விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் விப­ர­மான ஒரு அறிக்­கையை  பேர­வையில் தாக்கல் செய்­ய­வுள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்த விளக்­கங்­களை அளிக்­க­வுள்ளார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அது­மட்­டு­மன்றி  இலங்கை   பொறுப்­புக்­கூறல்  பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பது என்­பதில்  எவ்­வா­றான சவால்­களை  எதிர்­கொள்­கின்­றது என்­பது குறித்து  வெளி­வி­வ­கார அமைச்சர் விளக்­க­ம­ளிக்­க­வி­ருக்­கின்றார். அத்­துடன் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அத­னூ­டா­கவும்  காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்றும்   பயங்­க­ர­வாத தடைச்­சட்டம்  நீக்­கப்­பட்டு அதற்குப் பதி­லாக புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­படும் என்றும்  இலங்­கையில் சார்பில்  ஜெனி­வாவில்  தெரி­விக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது. 

இதே­வேளை இலங்கை  அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­களும்  செயிட் அல் ஹூசைனும் தமது அறிக்­கை­களை வெளி­யிட்ட பின்பு உறுப்பு நாடுகள்  விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இலங்கை அர­சாங்கம் விரைந்து  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து    பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்­டு­மென்று   வலி­யு­றுத்­த­வுள்­ளன.  

அதே­போன்று  சர்­வ­தேச   அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும்   இலங்கை தொடர்பில் பல்­வேறு அறிக்­கை­களை 37ஆவது  கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­க­வுள்­ளன. இந்த அறிக்­கை­களில்   இலங்கை  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை   முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள்  வலி­யு­றுத்­த­வுள்­ளன.   கடந்த  2015 ஆம் ஆண்டு இலங்கை  அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால்  இலங்கை குறித்த  பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. 

இதில் வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள்,   மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­க­ளிப்­பு­க­ளுடன் பொறுப்­புக்­கூறல்  பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட அர­சாங்கம்   நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பாக  உண்­மையைக் கண்­ட­றிதல்,  நீதியை நிலை­நாட்­டுதல்,  நட்­ட­ஈ­டு­வ­ழங்­குதல், மற்றும்  மீள் நிக­ழாமை  ஆகிய விட­யங்­களின் அடிப்­ப­டையில்   பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. 

அந்த வகை­யி­லேயே அர­சாங்கம்  எவ்­வாறு  இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றது என்­பது குறித்து ஐக்­கி­ய­நா­டுகள்    மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் தாக்கல் செய்­ய­வுள்ளார்.  இது இவ்­வா­றி­ருக்க மார்ச் மாதம் 16 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான  பூகோள காலக்­கிர மீளாய்வு விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது. இதில்  கடந்த ஒக்டோபர் மாதம்   இலங்கை   ஐ.நா. மனித உரிமை பேரவையில்   வாக்குறுதிகள்  தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.  

பெப்ரவரி 26ஆம்திகதி முதல் மார்ச் மாதம்  23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள  ஐக்கியநாடுகள் மனித  உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில்  வெளிவிவகார அமைச்சர் தலைமையில்    உயர் மட்ட தூதுக்குழுவினர்     கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார  அமைச்சின்  மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெறுவர். 

No comments

Powered by Blogger.