பெற்றோருக்காக பிரார்த்திக்கும், நல்லொழுக்கம் நிறைந்த சிறுவன்
படத்தில் இருக்கும் சிறுவன் சவுதி அரேபியாவை சார்ந்தவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்த அனாதை சிறுவன்
ஆரம்ப பள்ளியில் படிக்கும் அந்த சிறுவன் வகுப்பின் இடைவேளை நேரத்தில் பள்ளியில் அமர்ந்து தொழுது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான் இதை பார்த்த ஆசிரியர் ஒருவர் இப்போது என்ன தொழுகை தொழுதாய் இறைவனிடம் என்ன வேண்டினாய் என விளக்கம் கேட்டார்
ஆம் லுாஹா தொழுகையை தொழுது விட்டு காலம் சென்ற எனது தந்தை க்கு இறைவன் சுவர்கத்தை வழங்க பிரார்த்தித்தேன் என்றார் அந்த சிறுவன்.
மரணத்திற்கு பின்பும் நமக்கு பயன் தரகுடியவைகளில் ஒன்றாக நபிகள் நாயகம் பெற்றோருக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகளை பற்றி சொன்னார்கள்
அப்படிபட்ட ஒரு சிறுவனை தான் படத்தில் பார்கின்றீர்கள்
கொடுத்து வைத்த பெற்றோர். அப்பெற்றோரையும், அச்சிறுவனையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
ReplyDeleteMasha Allah. Great parent to have such son.
ReplyDelete(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:186)