Header Ads



இலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் சுமார் 8 வருடங்களாக அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோரின் 3 குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணாக குறித்த பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட இந்திய பெண் காலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டில் கந்தசாமி குடும்பத்தினர் ஒருமாதம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இந்திய பணிப்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளனர். அவரது உணவுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். மிகவும் பலவீனமடைந்ததால் போலியான பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தகவல் வழங்கியுள்ளது.

பொலிஸ் விசாரணையில், கந்தசாமி குடும்பத்தினர் இந்திய பணிப்பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக நடத்தியது தெரியவந்தது. அந்த பெண் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட கந்தசாமி, குமுதினி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் பெயர், விபரங்கள் எதனையும் அவுஸ்திரேலிய பொலிஸார் வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.