Header Ads



"அரசாங்கத்தில் பெரும், குழப்பம் ஏற்படவுள்ளது"

மத்திய வங்கியின் முறிவிநியோக மோசடி குறித்து விசாரணைநடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும், அரசாங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்படவுள்ளதாக மகிந்த அணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு கிடைத்த அரசத்தரப்பு தகவல்களின்படி, இந்த அறிக்கை வெளியாதன் பின்னர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் விலகிக் கொள்ளவுள்ளமை தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாத பலர், அதற்கான ஆதரவை வழங்க மறுக்கவுள்ளனர்.

அத்துடன் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வசம் உள்ள பல அமைச்சுப் பொறுப்புக்களையும் ஜனாதிபதி கையேற்றுக் கொள்ளவிருப்பதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.