டிலானின் வாயை, மூடச்செய்த துமிந்த
தெய்யத்தகண்டிய மற்றும் பதியதலாவ பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அந்த பிரதேச சபைகளின் ஆளுகைக்கு உட்பட்ட வாக்காளர்கள், தமது வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அளிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் கூறியிருந்தார்.
எனினும் அப்படியான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன முன்னணியிடம் காட்டிக்கொடுக்க தயாரில்லை எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
பொதுஜன முன்னணியுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எந்த அரசியல் கொடுக்கல் வாங்கல்களும் இல்லை. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக கட்சி நீதிமன்ற நடவடிக்கையை எடுக்கும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment