ரணில் செய்த, நல்ல காரியம் (முஸ்லிம் உம்மாவின் கவலையை, அமெரிக்காவுக்கு விளக்கினார்)
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலே த்தை அறிவித்தமையினால் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அரசாங்கம் அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷா ப்பை அழைத்து உத்தியோகபூர்வமாக விடுத்துள்ளார்.
அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி தொடர்பில் இல ங்கை கரிசனையுடன் உள்ளது. எனவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்துள்ளமையின் ஊடாக அந்த நாடுகளின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டார். இதனையடுத்து இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் அதிருப்தியை வெளியிட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சர்ச்சைக்குரிய ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டதுடன் ஜெருசலம் நகரில் அமெரிக்காவின் புதிய தூதரகம் 2 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். இதன் பின்னர் நிலைமை மொசமடைந்ததுடன் ஐ நா பாதுகாப்பு சபை அவசரமாக கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்தது.
இந்நிலையில் இலங்கை தனது நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு சவாலானதாகவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்தமை அமைந்துள்ளது. எனவே இந்த விடயத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
தேர்தல் வருகின்றன முஸ்லீம்களின் வாக்கு வேண்டும்
ReplyDeleteThis is a soft toned condemnation. He should have condemned the move outright instead of saying it would interrupt the peace process.
ReplyDeleteAs Mustafa Jawfer says, it is an eye wash because of the upcoming election.