Header Ads



பீதியை ஏற்படுத்த வேண்டாம்

சந்தேகத்திற்கு உரிய விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொது மக்களை தேவையற்ற பீதிக்கு உட்படுத்தக்கூடாது.

இதனால் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய நிலை இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டதுடன் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

சுனாமி அல்லது திடீர் அனர்த்தம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு 24 மணித்தியாலம் செயற்படும் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.