Header Ads



கோத்தபய ஜனாதிபதியாவார் என்ற செய்திக்கு, கொழும்பு பல்கலைக்கழகம் மறுப்பு

2020 ஆம் ஆண்டு  யார்  இலங்­கையின்  தலை­வ­ராக   வருவார் என்ற   வகையில்  எவ்­வி­த­மான  ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும்  தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் தின் கலைப்­பீட  ஊட­கத்­து­றைப் ­பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொன்றில் 2020 ஆம்  ஆண்டில் இந்த நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ தெரி­வு­ செய்­யப்­ப­டுவார் என்று நேற்று வெளியான  வார இறுதி சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் கொழு ம்பு  பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு விடுத்­ துள்ள அறிக்­கை­யி­லேயே  இந்த விட­யங்கள்  குறிப் பி­டப்­பட்­டுள்­ளன. 

இது தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின்  கலைப்­பீ­டத்தின் ஊட­கப்­பி­ரிவின்  இணைப்­பாளர்  பேரா­சி­ரியர் சமந்த ஹேரத் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,- குறித்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­வாறு எவ்­வி­த­மான கருத்­துக்­க­ணிப்­பையும்  கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு செய்­ய­வில்லை.  இவ்­வாறு  கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­ய­தா­க, செய்­தியை வெளி­யி­டு­வதன் மூலம் வாச­கர்கள்   தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர்.  

எந்­த­வொரு நபரும் ஆய்­வொன்றை நடத்­து­வதும் அதனை பிர­சு­ரிப்­ப­தற்கும் உரி­மையைக் கொண்­டி­ருக்­கிறார். ஆனால்  அவ்­வா­றா­ன­தொரு   கருத்­துக்­க­ணிப்பை  கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு செய்­தி­ருந்தால்  அதனை கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் செய்­த­தாக கூறு­வது வேறு­பட்ட அர்த்­தத்தைக் காட்டும்.  

இந்த செய்தி வெளி­யா­னதன் பின்னர்   இவ்­வா­றா­ன­தொரு  கருத்­துக்­க­ணிப்பை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு  முன்­னெ­டுத்­ததா என்று பலர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆனால்  அது தொடர்பில் எம்­மை ­யாரும்  தெளி­வு­ப­டுத்­த­வில்லை. அத­னால்தான் இது­தொ­டர்பில்  தெளி­வு­ப­டுத்தும் நோக்கில்  இந்த அறிக்­கையை நான் வெளி­யி­டு­கின்றேன். 

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்றவகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளதாக வெளிவந் துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித் துக்கொள்கின்றேன். இந்த விடயத்துடன்  கொழும்

No comments

Powered by Blogger.