Header Ads



ஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றி, சாதனை படைத்துள்ளோம் என்கிறது அமெரிக்கா

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்தது.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்காத வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. 

இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய பிரிட்டன் நாட்டுக்கான ஐ.நா. பிரதிநிதி மாத்யூ ரைகிராப்ட், ஒருதலைபட்சமாக ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவித்ததுடன் தலைமை தூதரகத்துக்கு அங்கு மாற்றும் அமெரிக்காவின் முடிவை ஏற்றுகொள்ள முடியாது.

டெல் அவிவ் நகரில் உள்ள எங்கள் நாட்டின் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற மாட்டோம். ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இருநாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகராக ஜெருசலேம் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் ஐ.நா.சபைக்கான சிறப்பு தூதர் பிராங்கோயிஸ் டெல்லாட்ரே, அமெரிக்காவின் இந்த தலையீடு அரசியல்சார்ந்த விவகாரத்தை மதமோதலாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும், இது அமைதிக்கான திறவுக்கோலான ஜெருசலேம் நகரில் தீவிரவாதம் தலைதூக்க காரணமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐ.நா.சபைக்கான சிறப்பு தூதர் நிக்கி ஹாலே பேசினார். 

‘இன்று இங்கு நாங்கள் சந்திக்கும் தீர்மானம் அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றதாகும். பாலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நன்மையைவிட தீமைகளையே அதிகம் செய்துள்ளது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும்’ 

அமெரிக்காவின் தூதரகத்தை எங்கே அமைக்க வேண்டும்? என்பதை எந்த நாடும் எங்களுக்கு கூற முடியாது. எங்கள் தூதரகத்தை எங்கே அமைப்பது? என்பது தொடர்பான முடிவுக்கு எங்கள் இறையாண்மையை பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் இதை பெருமையுடன் செய்து முடித்தோம் என்ற சாதனை எங்களை சேரும்.

எனவே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் எங்களது முயற்சிகளை தொடரவும், எங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும் இந்த தீர்மானத்தை ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் அமெரிக்கா நிராகரிக்கின்றது’ எனவும் அவர் கூறினார்.

18 comments:

  1. Bulshit us decision. Palestine is not yours decide its capital. Do this in your land... how come if we decide the capital of us ? Its ugly is it? Same to you too

    ReplyDelete
  2. Ateeq you are too small to world politics... That is why you do not understand why many Arab countries are willingly or unwillingly having connection to US. Even Turkey too has base for US, Qatar too has base for US..

    They have political reason for allowing US have some connection... BUT you are so childish to understand this connection.. You only knows to find mistake of SAUDI.. No doubt.. every body has mistakes and Every leader has mistakes.... Even you and me too have mistakes..

    Did anybody paid you .... to make noise only on Saudi ? Why not you talk the mistakes of other countries ?

    I feel sorry for you situation.

    May Allah Correct You, Me and All Muslims form blindly shouting at only one country leaders for their GOOD or Wrong.

    ReplyDelete
  3. We give 100% support to USA all the way.

    USA try to bring permanent peace in SL, but Muslim countries voted against Tamils in Geneva.

    ReplyDelete
    Replies
    1. Ur support will put in to the pit

      Delete
    2. Don't rush, if you happened to live longer you will see the change in the world and who going to give the ever lasting solution to the world.

      Delete
  4. உமக்குத் தான் ஈரானிலிருந்து பணம் வருகிறது,
    أخلاق ஐப் பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் உன்னைத் திருத்து உலகம் திருந்தும்.

    ReplyDelete
  5. Abuateeq.. many srilankan study at madeena universty not only free bou also get money for thier expendture. Do not u know this..? Just u bring the story of one doctor. We know many kids go to same saudi government school free education. Do not act on only what you know. But there are many good things from saudi u do not know or u r trying act that u do not know.
    No medicine for this problem... all due to your group is hopfully banned in saudi .. Allah knows best

    ReplyDelete
  6. Abuateeq are u ready to obey muhamed sal? Then read this hadees and obey the amir as per it
    யா அபூஅதீக் பின்வரும் ஹதீஸ் பற்றி உங்கள் கருத்தை தெரியலாமா?
    “There will appear after me rulers, they will not guide by my guidance, and they will not establish my Sunnah; there will be amongst them men whose hearts will be hearts of devils in the bodies of men!” He was asked: “How should I behave, O Messenger of Allāh, if I reach that time?” He replied: “Hear and obey the Amīr (i.e. the ruler), even if he beats your back and [illegally] takes your wealth – hear and obey!” [1]

    ஹதீஸ் இவ்வாறு இருப்பதை அறிந்த பின் உங்கள் நிலை மாறும் என நினைக்கின்றேன். நபி நமக்கு பொறுமையாக இறுக்க சொன்ன பிறகு .. கட்டுப்படுவது கடமையாகும்

    ReplyDelete
    Replies
    1. ஹதீஸ் அல்ல நபியவர்கள் நேரடியாக வந்து சொன்னாலும் விதண்டாவாதம் பிடிப்பவர்களை திருத்துவது கடினம்.

      Delete
  7. So do you think that gulf rulers are like this and why do you support them then..why?
    Do you support evil rulers

    ReplyDelete
  8. Atteeq Abu: ஊதிய ஏற்றத்தாழ்வு சவூதியில் மட்டும்தான் இருக்கின்றதா? ஏன் ஐரோப்பவிலும் அமெரிக்காவிலும் தான் இருக்கிறது. எத்தனை நாடுகளில் நீங்கள் வசித்திருக்கின்றீர்கள்? அத்தனை இலகுவில் சில நாடுகளுக்குள் பிரவேசிக்கவே முடிவதில்லை!?!. சவூதியில் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி கல்வி அமைப்பு இருக்கின்றது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என்று சவூதியின் தெசிய கல்வி அமைப்பு அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டதாகும், அதில் கீழத்தெயத்திய மாணவர்கள் ஜொலிப்பது மிகவும் சவாலானது, அன்றியும் எனக்குத் தெரிந்த எனது நண்பரின் குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட வில்லை ஆனால் அவர்களின் பாடத்திட்டம் நமது பாடத்திட்டத்த்துடன் பட்டப்பின் படிப்புக்கு ஒத்து வராது என்ற காரணத்தினால் அவரது குழந்தையை நமது நாட்டு கல்வித்திட்டத்துக்கு அமைவாகப் படிக்கவைத்தார். ஆகவே குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக அபாண்டங்களை சுமத்தாதீர்கள். அன்றியும் நீங்கள் என்ன ஆய்வாளராகவா இருந்தீர்கள்? மதீனாவில் உள்ளவர்கள் நல்ல்வர்கள் மற்ற மாநிலத்தார் கெட்டவர்கள் என்று கூற, உங்களுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்திற்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம். அப்படிப்பார்த்தால் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கற்பழிக்கப் பட்டும் கொல்லப்பட்டுமுள்ளனர் என்வே இலங்கையர் எல்லோரும் காமக் கொடூடர்கள் என்று அறிவித்து விடலாமா? மேலும் மனிதர்களை வைத்து குரானையும் ஹதீதையும் எடைபோடுவதை விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  9. @ Ateekabu calm down. Read the hadeeth which bro rasheed has mentioned.
    It clearly says those kings will not follow the right path YET we should obey them.
    Is it hard for u to understand or is it mystique Sufism is covering ur heart from knowing the truth ? Or accepting the truth.?

    ReplyDelete
  10. Brother...Abu

    Writing this Hadees is to enlighten you about the position of ISLAM on OBEYING MUSLIM Rulers..
    It does not mean that current Ruler is BAD or GOOD.

    I hope you did not understand the last part of the hadees " OBEY THE MUSLIM RULER EVEN IF HE IS ACTING EVIL"

    If this is the case what about OBEYING an Average Rulers Today ?

    Once Hedees is placed in front of you.. if it is saheeh.. Then to be a TRUE Muslim OBEY the Hadees and so OBEY the ruler. If the Ruler is bad.. ISLAM has ways to correct him.. BUT not the way of Kuffar of protesting and writing evil in public media to make destruction to the land.

    May Allah Guide us and protect us from satan and our evil desires

    ReplyDelete
  11. புத்திமதி பலனளிக்காது சகோதரா,
    அல்லாஹ் நாடினாலே தவிர.

    ReplyDelete
  12. புத்திமதி பலனளிக்காது சகோதரா,
    அல்லாஹ் நாடினாலே தவிர.

    ReplyDelete

Powered by Blogger.