Header Ads



மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றார். 

இந்நிலையில் தமது அணியிரனுக்கும் தனக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் அதிகரித்து தருமாறு அவர் தரப்பின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு பிரிவின் மூலமாகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

1 comment:

  1. இது எவ்வளவு பரிகாசம் கொஞ்ச கள்ளர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு நாட்டை நல்லமுறையில் நடாத்த யாரையும் விடமாட்டேன் அதை என்னிடமும் என் கள்ளதோழர்களிடமும் ஒப்படையுங்கள் என்று இரவு பகலாக பைத்தியம் பிடித்து அலையும் ஒருவருக்கு பாதுகாப்பு தரட்டுமாம் இது எப்படி? இன்றய பிரதமர் சட்டத்தை மதிகும்முறையை மக்களுக்கு அவருடைய அழகிய முன்மாதிரியால் சட்டத்தின் முன் தன்னை நிருத்தி எடுத்துகாட்டினார் இதை இந்த இராஜபக்‌ஷ தவறு என்று கூறுகின்றான் இவன் மீண்டும் ஆட்சிக்குவந்தால் என்ன எத்தனை களவுகளும் அநியாயங்களும் நிகழுமென்று மக்களே நன்றாக சிந்தியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.