Header Ads



இம்ரான் கானை தகுதி, நீக்கம் செய்யமுடியாது


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கடந்த 1992-ம் ஆண்டில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி கைபர் பகதுங்வா பகுதியில் ஆளும்கட்சியாகவும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

அறக்கட்டளை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதியுதவி பெற்றதாகவும், அந்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியதாகவும் இம்ரான் கானுக்கு எதிராக குற்றச்சாடுகள் குவிந்தன. இந்த பணத்தை வைத்து அரசியல் கட்சியை நடத்தும் இம்ரான் கானையும், அவரது நெருங்கிய கூட்டாளியும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜஹாங்கிர் கான் டரீன் என்பவரையும் பொது வாழ்வில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் நாட்டு ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஹனிப் அப்பாசி என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தலைமைஇ நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் கடந்த ஓராண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பினராலும் 7 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 50 முறை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. பொது வாழ்வில் இருந்து  இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை  தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் ஜஹாங்கிர் கான் டரீனுக்கு ஆயுள் முழுவதும் பொது வாழ்வில் ஈடுபட தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

No comments

Powered by Blogger.