தேர்தலுக்கு பின்னர் இணைவார்களா..?
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆட்சியமைக்கும் போது பரஸ்பர இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து மைத்திரி - மஹிந்த அணியினர் இரகசியமாகப் பேச்சு நடத்தி வருகின்றனர் என அறியக்கிடைத்துள்ளது.
ஏற்கனவே, இவ்விருவரையும் இணைக்கும் பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
அதேநேரம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்குவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அணியினரை மற்ற அணியினர் விமர்சிக்கக்கூடாது என்றும், இன்னொரு தரப்பைப் பாதிக்கும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இருதரப்பினரும் முடிவெடுத்துள்ளனர் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment