Header Ads



ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் சிலர், மைத்திரிக்கு ஆதரவு

களனி தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முகமாக சிறிலங்கா சுதந்தர கட்சியில் இணைந்துள்ளனர். 

அவர்கள் இன்று (26) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனிஷ்க சமரசிங்க, நோபட் பெரேரா மற்றும் பேலியகொட நகர சபையின் முன்னாள் உறுப்பினர் லக்‌ஷ்மன் பெரேரா உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் 

அதேவேளை. சிறிலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த மொஹமட் ஸ்மயில் மொஹமட் சஃபீயும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடிமிருந்து தமக்கான நியமனக்கடித்தை பெற்றுக்ககொண்டார்.

No comments

Powered by Blogger.