Header Ads



சவுதி சென்ற பெண், சடலமாக திரும்பினார்

பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவூதி அரேபியா சென்று, ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்த பெண்ணொருவரின் உடலம் நாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது.

மாடி வீட்டொன்றில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்னர் வீழ்ந்த குறித்த பணிப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கெகிராவை – கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த 2013ஆம் ஆண்டு நாடு திரும்பவிருந்த நிலையில், அவர் வீட்டு உரிமையாளரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.