Header Ads



ஹவுத்திகள் தன் மீது மேற்கொண்ட, ஏவுகணை தாக்குதலை மறுக்கிறது அபூதாபி


ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் அமைக்கப்படும் பராக்கா அணு மின்சார நிலையத்தை நோக்கி ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் அறிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டு ஆதரவுடன் ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக போரிட்டு வரும் ஹவுத்தி படையினரின் இணையத்தளத்தில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை ஏவுகணை தாக்குதல் தொடர்பாக எந்த ஆதாரங்களையும் அவர்கள் வெளியிடவில்லை. ஹவுத்தி படைகளுக்கு எதிராக சவுதி அரேபியா அரசு போரிட்டு வருகிறது.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஹவுத்தி படைகள் அபுதாபி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அபுதாபி நாட்டின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும் பராக்கா அணு மின்சார நிலையத்தை நோக்கியே இன்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பராக்கா அணு மின்சார நிலையத்தை நோக்கி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தியினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ஏமன் கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், சவுதி படைகள் எதிர் தாக்குதல் நடத்தி அதை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.