முடிவுக்கு வந்தது, ரயில்வே வேலைநிறுத்தம்
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று -13- அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதனையடுத்து பல அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் அது பலனளிக்காது போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டது.
நான்கு பேர் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தும் தமது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகஇ தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
இன்று -13- அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதனையடுத்து பல அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் அது பலனளிக்காது போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டது.
நான்கு பேர் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தும் தமது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகஇ தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
Post a Comment