Header Ads



சுதந்திர கட்சி பிளவுபட, இவர்கள் இருவருமே காரணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரே nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தயாசிரி தயாசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள்தில் இன்றைய தினம் -13- இடமபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்த இருவர் முயற்சிப்பதாக கூறினீர்கள் அவர்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிரி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்துக்கொள்பவர்களை இணையவிடாமல் தடுப்பதற்கும், அங்கம் வகிப்பவர்களை விலக்கிக்கொண்டு அவர்கள் அணியில் சேர்த்துக்கொள்வதற்கும் குறித்த இருவருமே அதிக பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர் என குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.