Header Ads



"துரோகம் செய்திருந்தால் நாம் இப்பொழுதும், கதிரையிலையே இருந்திருப்போம்" - ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு  சார்பாக  தமிழர் விடுதலைக் கூட்டணி  செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான  கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்,

"எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த தீர்வுகளை விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக் கொண்ட நிலையில் சிலர் தமது அரசியல் அபிலாசைகளுக்காக துரோகத்தனமான வேலைகளை செய்திருந்தனர் அவர்களைப் போல் கதிரைக்காக அடிபடுபவர்கள் அல்ல துரோக வேலைகளை நாமும் செய்திருந்தால் நாம் இப்பொழுதும் கதிரையிலையே இருந்திருப்போம் எனக்கு நன்றாக வயது சென்று விட்டது நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு நடந்த துரோகங்களுக்கு சவாலாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்" எனவும் தெரிவித்தார்

1 comment:

  1. நல்ல விஷயம்... இனவாத அடிப்படையில் அரசியல் செய்யும் சுரேஷ் போன்றோரை இணைத்துக் கொண்டதன் மூலம் உங்களின் நற்பெயரை கெடுத்து கொண்டீர்கள்... அவசரப்பட்டு வாக்குறுதியை வழங்க வேண்டாம்... சுரேஷ் போன்றோர் சொல்லும் தீர்வு கடைசி வரை கிடைக்காது... அதேபோல் இனவாத முதல்வர் விக்னேஸ்வரனை உங்கள் கட்சியின் தலைமை பதவியை பாரம் எடுக்கும்படி கோருகிறீர்கள்.. இவர்கள் இருக்கும் வரைக்கும் வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை... எனவே உங்களின் வாக்கு செல்லாக்காசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.