Header Ads



கொள்ளையர்களை ஓடவிட்ட பாதுகாப்பு அதிகாரி

அஹங்கம அரச வங்கியொன்றை கொள்ளையிட வந்த நபரொருவர் வங்கி பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் முகத்தை மூடிக்கொண்டு உந்துருளியில் வந்த இருவர் வங்கியினுள் நுழைந்து கொள்ளையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது , வங்கியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி குறித்த நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் , குறித்த நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் , அதில் ஒருவர் வங்கியின் அருகில் துப்பாக்கிச்சூடு பட்டு விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தற்போதைய நிலையில் , கராபிடிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.