இலங்கையில் இப்படியும், ஒரு கொடூரன்
பண்டாரகம பகுதியில் தாய் மற்றும் தந்தையருக்கு நீண்டகாலமாக பல்வேறு வகையில் சித்திரவதைகளை செய்த மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
82 வயதுடைய தந்தைக்கும் 78 வயதுடைய தாய்க்கும் மகனான குறித்த நபரின் வயது 49 ஆகும்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாவார்.
சில வருடங்களுக்கு முன்னதாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் பிரிதொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர் தனது பெற்றோரின் பெயருக்குரிய காணி மற்றும் வீட்டின் உரிமத்தினை புதிய மனைவியின் பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார்.
அது மாத்திரமின்றி தங்க ஆபரணங்களை தனது பெற்றோர் கொள்ளையிட்டுள்ளனர் என தெரிவித்து பண்டாரகம காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.
குறித்த நபரின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறையினர் பெற்றோர் தங்க ஆபரணங்களை கொள்ளையிடவில்லை என அறிந்துக்கொண்டனர்.
இதன்பின்னர் பெற்றோரை காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குறித்த தங்க ஆபரணங்கள் தரைவிரிப்பிற்கு அடிபாகத்தில் மகனால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவம், ஆனால் பெற்றோர் கொள்ளையிட்டனர் என தெரிவித்து தந்தையின் தலையை பிடித்து சுவற்றில் தாக்க முயற்சித்ததாகவும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தடுக்க முயற்சித்த அம்மாவின் கழுத்தினை பிடித்து நெறித்து சித்திரவதை செய்துள்ளார்.
பின்னர் அம்மாவை பிடித்தவாறே தலையில் மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளார்.
அயலவர்கள் முரண்பட்டதை தொடர்ந்து அயல் வீட்டில் வசித்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவர்களை காப்பாற்றி இரத்தினபுரியில் உள்ள அவர்களின் மூத்த மகளின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த மூத்த மகள் பெற்றோரை அழைத்துக்கொண்டு இன்று முற்பகல் பண்டாரகம காவல் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய 49 வயதான அவர்களின் மகனான குறித்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment