இலங்கை வீரர்களுக்கு, என்ன நடந்தது? பாரிய தவறிழைத்த கிரிக்கெட் நிறுவனம் (வீடியோ)
விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியின்றி இந்தியா நோக்கிப் புறப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் அணி மீள அழைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு விமான நிலையத்திற்கு சென்று இந்தியா புறப்படத் தயாராகவிருந்த நிலையில், அணி மீள அழைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியைப் பெற்று வீரர்கள் இந்தியா புறப்பட்டிருக்காத காரணத்தால், அனுமதியைப் பெற்று செல்லுமாறு அவர்களுக்குத் தாம் அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இன்று காலை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பெயர் பட்டியலுக்கு தாம் அனுமதியளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதியளித்த இலங்கை ஒரு நாள் குழாம் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.
திசர பெரேரா தலைமையிலான இந்தக் குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Post a Comment