எமக்கு அதிகாரங்களை தாருங்கள், ஒரு ரூபாய்கூட ஊழலற்ற ஆட்சியை முன்னெடுத்து காட்டுகின்றோம்
ஊழல், மோசடிகள், குற்றங்கள் நிறைந்த ஆட்சியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி மாற்றுப்பாதையில் களமிறங்குகின்றது. உள்ளூராட்சி சபையின் எமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் போராட்டம் வரையில் நீடிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தேசிய மாநாட்டில் சூளுரைத்துள்ளனர்.
எமக்கு அதிகாரங்களை தாருங்கள் மக்களின் நிதியில் ஒரு ரூபாய் கூட ஊழல் இடம்பெறாத ஆட்சியை முன்னெடுத்து காட்டுகின்றோம் எனவும் அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மாநாடு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங் கில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன் னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக உரையாற்றுகையில்,
மக்கள் விடுதலை முன்னணி நீண்டதொரு போராட்டத்தை நடத்தி இன்று முக்கியமான ஒரு கட்டத்திற்கு நாட்டை கொண்டுவந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது மூன்று ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய போராட்டத்தை நாம் பாராளுமன்றத்தின் உள்ளும், வெளியிலும் முன்னெடுத்தோம். அவ்வாறிருக்கையில் இன்று அரசாங்கம் வேறு வழியில்லாது மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியே முக்கிய காரணமாகும். இந்தத் தேர்தலை சாதாரண தேர்தலாக கருத வேண்டாம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடத்தப்படும் தேர்தலாக இருந்தாலும் இதுவே நாட்டின் மாற்றத்தை உருவாக்கும் அடித்தளமாகும். அவ்வாறிருக்கையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பலத்தினை உருவாக்க நாம் சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம். 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக அமையும். அதில் மக்கள் விடுதலை முன்னணியின் பலம் என்னவென்பது அனைவருக்கும் தெரியவரும். எமது ஆட்சியினை அமைத்து மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்றார்.
இலங்கை இந்தளவு வங்குரோத்து நிலையை அடையக் காரணம் நிதி ஊழல் போன்றே மொழி ஊழலும்தான்.
ReplyDeleteதேசிய மொழிகளாகிய தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்றில் தமக்கு வேண்டிய எந்த மொழியிலும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி நிர்வாகம் சுமுகமாக நடக்கும் என்றால் இன ரீதியான அரசியலுக்கே இந்நாட்டில் இடமிருக்காது.
இதனை பகிரங்கமாக உங்கள் அரசியல் மேடைகளில் உத்தரவாதம் தந்து அதனை உள்ளூராட்சி சபைகளில் நிரூபிக்க முடியும் என்றால் 2020 ஆச்சரிய அரசியல் வெற்றி தொடு தூரம்தான்!
I believe that JVP will be able to do the good governance...
ReplyDeleteBoth UNP and SLFP have proved themselves as corrupted to extreme. It wouldn't hurt to give a chance to JVP. Even if they do not govern 100% perfectly they cannot be worst compare to the other two parties.
ReplyDelete